பறிக்கப்பட்ட `திருமதி இலங்கை பட்டம் - போராட்டத்தின் மூலம் வென்ற பெண்!

by Sasitharan, Apr 9, 2021, 11:34 AM IST

திருமணம் முடிந்த பெண்களுக்கான திருமதி இலங்கை அழகி போட்டி அண்மையில் நடைபெற்றது. 2021ம் ஆண்டுக்கான இந்த போட்டியில் புஷ்பிகா டி சில்வா என்பவர் முதல் இடம் பிடித்தார். அவரருக்கு பட்டம் வழங்கப்பட்டது. மகிழ்ச்சியாக கிரீடத்தை சூடிய புஷ்பிகாவுக்கு அந்த சந்தோஷம் சில நிமிடம்கூட நீடிக்கவில்லை. உடனே அவரிடமிருந்து அந்த பட்டம் பறிக்கப்பட்டது.

காரணம், புஷ்பிகா விவாகரத்து பெற்றவர் என்பதால் அவர் இப்பட்டத்தை பெற தகுதியில்லை என்று கூறி கடந்த முறை பட்டம் வென்ற கரோலினா ஜூரி பட்டத்தை பறித்தார். இதனையடுத்து திருமதி இலங்கை பட்டம் இரண்டாம் இடம் பிடித்தவருக்கு வழங்கப்பட்டது.

கலிபோர்னியாவை சேர்ந்த நிறுவனம் நடத்திய போட்டியில் கரோலினா ஜூரி திருமதி உலக அழகி பட்டத்தையும் வென்றவர். இதில் மற்றொரு வருத்தத்துக்குரிய செய்தி என்னவென்றால், கிரீடத்தை வேகமாக எடுத்ததால், புஷ்பிகா தலையில் காயம் ஏற்பட்டது. விசாரணையில் புஷ்பிகா தனது கணவரை பிரிந்து வாழ்வது உண்மைதான் ஆனால் விவாகரத்து ஆகவில்லை என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தி புஷ்பிகாவுக்கே அந்த பட்டம் திரும்ப வழங்கப்பட்டது. மேலும் புஷ்பிகா மீது வீண் பழி சுமத்திய கரொலினுக்கு இது பாதகமாக அமைந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகார் அடிப்படையில் வென்ற கரோலின் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிகழ்ச்சியல் ஜூரி மற்றும் அவது உதவியாளர் சுலா மனமேந்த்ரா ஆகியோரை நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தை சேதம் படித்தியதாகவும், தாக்கியதாகவும் கைது செய்துள்ளோம். என்று மூத்த போலீஸ் அதிகாரி அஜித் ரோஹனா தெரிவித்துள்ளார்.

You'r reading பறிக்கப்பட்ட `திருமதி இலங்கை பட்டம் - போராட்டத்தின் மூலம் வென்ற பெண்! Originally posted on The Subeditor Tamil

More World News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை