இந்தோனேசியா: 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி

Sep 9, 2018, 10:30 AM IST

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் 4 பேருந்துகளில் சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு சுகாபூமி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர்.

இந்த நான்கு பேருந்துகளில் ஒரு பேருந்து, அதிக வளைவுகள் உள்ள சாலையில் திரும்ப முயன்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. சுமார் 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்ததில், சம்பவ இடத்திலேயே 21 பேர் பலியாகினர்.

மேலும், படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading இந்தோனேசியா: 100 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை