14 குழந்தைகளுக்கு கத்திகுத்து- சீனாவில் நடந்த கொடூரம்

Woman attack 14 children in china

Oct 26, 2018, 18:36 PM IST

சீனாவில் ஒரு பூங்காவில் இருந்த 14 குழந்தைகளை ஒரு பெண் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சோங்கிங் மாகாணத்தில் உள்ள மழலையர் பள்ளி வளாகத்தில் உள்ள விளையாட்டு பூங்காவில் பயிற்சியை முடித்துவிட்டு, குழந்தைகள் வெளியே வந்தனர். அப்போது, வாசலில் நின்று கொண்டிருந்த 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குழந்தைகளை கத்தியால் குத்தியுள்ளார்.

இதனை பார்த்த பெற்றோர், பள்ளி பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் அந்த பெண்ணை மடக்கி பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள் காயம் அடைந்தன. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதான 39 வயது பெண், மனநலம் பாதிக்கப்பட்டவர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குழந்தைகளை எதற்காக தாக்கினார் என்பது குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

You'r reading 14 குழந்தைகளுக்கு கத்திகுத்து- சீனாவில் நடந்த கொடூரம் Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை