Aug 30, 2019, 13:51 PM IST
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து, கர்நாடக காங்கிரசின் முக்கியப் புள்ளியும், முன்னாள் அமைச்சருமான டி.கே.சிவக்குமாரை குறிவைத்துள்ளது அமலாக்கத்துறை .நேற்று நள்ளிரவில் சம்மன் அனுப்பி, இன்று பிற்பகலுக்குள் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Read More
Aug 29, 2019, 13:17 PM IST
சேலத்தில் பாஜகவினரால் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் தாக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை,அடுத்த கட்சி அலுவலகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்து வரம்பு மீறி கலாட்டா, காலித்தனம் செய்வதுதான் ஜனநாயகமா? இதையே அண்ணா அறிவாலயம் அனுமதிக்குமா? என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Aug 29, 2019, 10:32 AM IST
சேலத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது தாக்குதல் நடத்தியதற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய பாஜகவினரை கைது செய்ய வேண்டும் எனவும் சீமான் வலியுறுத்தியுள்ளார். Read More
Aug 29, 2019, 09:13 AM IST
சேலத்தில் சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் மீது பாஜகவினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலை கொண்டாடும் விதமாக, பியூஸ் மனுஷ் என்பதற்குப் பதிலாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பெயரைப் போட்டு பியூஸ் கோயலை துவைத்து எடுத்து விட்டார்கள் நம் இந்து அபிமானிகள்.. மிக்க சந்தோஷம்... என்று டுவிட்டரில் பதிவிட்டு சொந்தக் கட்சி அமைச்சருக்கே சூன்யம் வைத்துள்ளார் பாஜக அபிமானி ஒருவர். இந்தப் பதிவை பதி விட்ட அந்தப் புள்ளியை கேலியும், கிண்டலுமாக பாடாய்ப் படுத்தி வருகிறார்கள் நெட்டி சன்கள். Read More
Aug 28, 2019, 12:18 PM IST
காஷ்மீர் பிரச்னை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் பாகிஸ்தானோ வேறு நாடுகளோ தலையிட முடியாது என்று ராகுல்காந்தி தெளிவுபட கூறியுள்ளார். Read More
Aug 28, 2019, 10:59 AM IST
கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பாவுக்கும் தலைவலி ஆரம்பமாகிவிட்டது.துணை முதல்வர் பதவி ஒதுக்கீட்டிலும், இலாகா ஒதுக்கீட்டிலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டதாக பாஜக மூத்த அமைச்சர்கள் பலர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அவர்களின் ஆதரவாளர்களோ போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளதால் எடியூரப்பாவுக்கு ஆரம்பமே சிக்கலாகியுள்ளது. Read More
Aug 27, 2019, 14:02 PM IST
மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி முன் வந்துள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வழி தெரியாமல், ரிசர்வ் வங்கி பணத்தில் சமாளிப்பது துப்பாக்கி குண்டு காயத்துக்கு பிளாஸ்திரியை ஒட்டி சமாளிப்பது போன்றது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். Read More
Aug 27, 2019, 13:36 PM IST
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார். Read More
Aug 27, 2019, 12:54 PM IST
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல அரசு மருத்துவமனைகளில், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More
Aug 26, 2019, 16:18 PM IST
அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து உயிரிழக்க காரணம்,ர் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சூனியம் வைத்துள்ளது தானாம். இதனைக் கூறியிருப்பவர் யார் தெரியுமா? சர்ச்சைகளுக்கு பெயர் போன சாட்சாத் பாஜக பெண் எம்.பி சாத்வி பிரக்யா தாக்கூறே தான். அவரின் பகீர் குற்றச்சாட்டு இப்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More