May 27, 2019, 08:57 AM IST
பிரதமர் மோடி அமைச்சரவையில் இந்த முறை அமித்ஷா இடம் பெறுவார் என தகவல் வெளியாகியுள்ளது. அருண்ஜெட்லி உள்பட சில சீனியர்களுக்கு பதவி கிடைக்காது என்றும், புதிய முகங்களுக்கு அதிக வாய்ப்பு தரப்படும் என்றும் பேசப்படுகிறது Read More
May 27, 2019, 08:54 AM IST
ஐந்து கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், பா.ஜ.க.வுக்கு ‘300 பிளஸ்’ என்று நான் சொன்னதை பலரும் கிண்டல் செய்தார்கள். ஆனால், பா.ஜ.க. அரசுக்கு ஆதரவான அலையே இந்த தேர்தலில் வீசியது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார் Read More
May 26, 2019, 20:04 PM IST
பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு பாகிஸ் தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒற்றுமை நிலவவேண்டும் என மோடியிடம் இம்ரான்கான் வலியுறுத்தியுள்ளார். Read More
May 26, 2019, 19:57 PM IST
வரும் 30-ந் தேதி மாலை 7 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் பிரதமராக மோடி மீண்டும் பதவியேற்பார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றே புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர். Read More
May 26, 2019, 14:02 PM IST
ஆந்திர முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். வரும் 30-ந் தேதி தாம் முதல்வராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்கவும் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி. Read More
May 26, 2019, 13:56 PM IST
தேனி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் தில்லு முல்லு நடந்ததற்கான ஆதாரம் உள்ளது என்றும், அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு தொடர்வேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அத்தொகுதியில் போட்டியிட்டவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். Read More
May 26, 2019, 10:58 AM IST
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தாலும், டெல்லி பாஜக வட்டாரத்தில் அக்கட்சிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் உற்று நோக்க வைத்துள்ளது. அதிலும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமைப் பதவியில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி விட்டு முதல்வர் என்ற அந்தஸ்தில் உள்ள கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவமும் அதிமுகவினரிடையே பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. Read More
May 26, 2019, 09:46 AM IST
ராஜீவ்காந்தி 400 இடங்களில் வெற்றி பெற்ற போது மக்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. அடல்ஜி வெற்றி பெற்ற போது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால், இப்போது பா.ஜ.க. வெற்றியை யாராலும் ஏற்று கொள்ள முடியவில்லையே!’’ என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
May 25, 2019, 20:42 PM IST
டெல்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டத்தில் நாடாளுமன்றக் குழுத் தலைவராக பிரதமர் மோடி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார் Read More
May 25, 2019, 13:53 PM IST
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த பெரும் தோல்விக்கு பொறுப்பேற்று, கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி விருப்பம் தெரிவிக்க, கட்சியின் மூத்த தலைவர்கள் அதை நிராகரித்து விட்டனர். ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவால் இன்று டெல்லியில் நடைபெற்ற கட்சியின் காரியக் கமிட்டி கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது Read More