Apr 24, 2019, 11:27 AM IST
நாட்டிலேயே இதுவரை நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் தான் அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக 77.68% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிக பட்சமாக கண்ணூர் தொகுதியில் 83.05 % வாக்குகளும், ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் 80.3% வாக்குகளும் பதிவாகி சாதனை படைத்துள்ளது கேரள மாநிலம் Read More
Apr 23, 2019, 17:16 PM IST
கேரளாவில் ஒரு வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த விவிபாட்(ஒப்புகைச் சீட்டு காட்டும்) எந்திரத்திற்குள் இருந்து பாம்பு வரவே வாக்காளர்கள் அலறியடித்து ஓடினர் Read More
Apr 23, 2019, 14:20 PM IST
ஜம்மு காஷ்மீரில் மிகவும் பதற்றம் நிறைந்த அனந்த் நாக் மக்களவைத் தொகுதியில் யாரும் வாக்களிக்க விரும்பாததால் சொற்ப அளவிலேயே வாக்குப்பதிவு நடந்துள்ளது Read More
Apr 23, 2019, 07:47 AM IST
தாராபுரத்தில் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக கூறி சித்தாப்பாவை அவரது அண்ணன் மகனே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 22, 2019, 12:12 PM IST
ஒடிசாவில் ஆளும் பிஜேடி கட்சி வேட்பாளரின் பண்ணை வீட்டை சோதனையிடச் சென்ற தேர்தல் அதிகாரிகள் மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதில் தேர்தல் அதிகாரிகள் பலத்த காயமடைந்தனர் Read More
Apr 22, 2019, 09:45 AM IST
துணை முதல்வர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் போட்டியிட்ட தேனி மக்களவைத் தொகுதியில் ஓட்டுக்கு ரூ.1000 என தாராளமாக பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடாதவர்களிடம், கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டு ஓ பிஎஸ் மகன் தரப்பில் கறார் வசூல் செய்யப்படுவதாக தேனி தொகுதிக்குட்ப பட்ட உசிலம்பட்டி பகுதியில் சர்ச்சை றெக்கை கட்டிப்பறக்கிறது. Read More
Apr 21, 2019, 10:58 AM IST
மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறி நுழைந்து ஆவணங்கள் பலவற்றை நகல் எடுத்த பெண் தாசில்தார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பை மீறி அதிகாரி நுழைந்தது எப்படி? மின்னணு வாக்கு எந்திரங்களில் முறைகேடுகள் செய்ய நடந்த சதியா? என்று கூறி மார்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் நள்ளிரவில் நடத்திய போராட்டத்தால் மதுரையில் பல மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Apr 20, 2019, 00:00 AM IST
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று தொடருக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 20, 2019, 08:08 AM IST
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. Read More
Apr 19, 2019, 15:20 PM IST
தமிழகத்தில் நேற்று நடந்த 38 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்பது குறித்த இறுதிப் பட்டியலை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்ட தருமபுரி தொகுதியில் அதிகபட்சமாக 80.49% வாக்குகள் பதிவாகி லிஸ்டில் முதலிடம் பிடித்துள்ளது. மிகக் குறைவாக தென் சென்னை தொகுதியில் 56.41% சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. Read More