May 20, 2019, 11:49 AM IST
ஒடிசாவில் சட்டசபைத் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம்(பிஜேடி) கட்சியே வென்று 5வது முறையாக ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகளில் தெரிய வந்துள்ளது Read More
May 20, 2019, 11:25 AM IST
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பறந்த விமானத்தில் திடீரென புகை வந்ததால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 161 பயணிகள் பத்திரமாக உயிர் தப்பினர் Read More
May 20, 2019, 11:07 AM IST
தமிழகத்தில் டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு,க. கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன Read More
May 20, 2019, 10:39 AM IST
மே 23-ந் தேதிக்குப் பிறகு கர்நாடகத்தில் கட்சி மாற்றம் நிகழப் போவதாக மீடியாக்கள் வெளியிட்ட செய்தியால் கொந்தளிப்புக்கு ஆளாகியுள்ளார் அம்மாநில முதல்வர் குமாரசாமி . எங்களை விமர்சிக்க நீங்கள் யார்? என்று ஆவேசமடைந்துள்ள குமாரசாமி, தொடர்ந்து எதிரான செய்திகளை வெளியிட்டால், சட்டம் கொண்டு வந்து மீடியாக்களை கட்டுப்படுத்தப் போவதாகவும் மிரட்டல் பாணியில் தெரிவித்துள்ளார் Read More
May 20, 2019, 09:03 AM IST
ஆந்திர முதல்வர் சந்திரபாபுவின் முயற்சியால் இன்று டெல்லி செல்லும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலை அக் கட்சி மறுத்துள்ளது. டெல்லியில் யாரையும் சந்திப்பது மற்றும் எந்த நிகழ்ச்சியிலும் மாயாவதி பங்கேற்கவில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது Read More
May 19, 2019, 21:25 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு சாதகமாகவே வெளிவந்துள்ள நிலையில், இந்தக் கணிப்புகளை நம்ப வேண்டாம். முன்னரே இப்படி ஒரு கணிப்புகளை வெளியிடச் செய்து வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற திட்டமிட்டுள்ளது பாஜக என்று மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை செய்துள்ளார். Read More
May 19, 2019, 21:17 PM IST
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் பலவற்றிலும் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை வெற்றி கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியே அதிக இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
May 19, 2019, 19:06 PM IST
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த அடுத்த நிமிடமே யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கப் போகிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. Read More
May 19, 2019, 18:16 PM IST
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் தரப்பு 20 ரூபாய் நோட்டு டோக்கன் கொடுத்தது போல், அரவக்குறிச்சி தொகுதியில் திமுகவினர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் எடுத்து டோக்கனாக வழங்கப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார் கூறியுள்ளார். Read More
May 19, 2019, 18:13 PM IST
பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இல்லாத மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அணிதிரட்டும் பணியில் மும்முரமாகி விட்டார். நேற்று ராகுல் காந்தியை சந்தித்த நாயுடு, இன்றும் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தியது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாகியுள்ளது. Read More