Jun 3, 2019, 11:10 AM IST
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கான வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்ப்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை கட்டாய பாடமாக்க பரிந்துரைக்கப்பட்டிருந்ததற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தமிழகத்தில் இந்தி கட்டாயமில்லை என்று வரைவு அறிக்கையில் திருத்தம் செய்துள்ளது மத்திய அரசு Read More
Jun 3, 2019, 08:54 AM IST
ஐந்து முறை தமிழகத்தின் முதல்வர் .. 50 ஆண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்.. 60 ஆண்களுக்கும் மேலாக சட்டமன்ற உறுப்பினர்... என கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு சரித்திரம் படைத்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தை சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாக உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்தவர். இந்திய அரசியலில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் தான் கலைஞர் என்று தமிழக மக்களால் அன்புடன் உச்சரிக்கப்பட்டவர்.இன்று அவருடைய 96-வது பிறந்த தினம் Read More
Jun 2, 2019, 13:12 PM IST
தெலுங்கானா மாநிலத்தில் +2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்துதலில் ஆசிரியர்கள் காட்டிய அலட்சியம் மேலும் மேலும் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்வு முடிவுகளில் ஒரு மாணவியை பெயில் என்று கூறிவிட்டு, மறுமதிப்பீட்டில் பாஸ் மார்க் கொடுத்து விட்டு அப்புறம் தவறு என்று கூறி பெயிலாக்கிய கூத்தால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவியோ, பெயில் என்று முடிவு வந்ததால் தற்கொலை செய்து, இப்போது உயிருடன் இல்லை என்பது தான் சோகத்திலும் சோகம். Read More
Jun 1, 2019, 13:32 PM IST
பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயமாக்குவது குறித்து கருத்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், இந்தியை திணிக்கக் கூடாது; ஆனால் விரும்பிய மொழியை யாரும் கற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார் Read More
Jun 1, 2019, 12:57 PM IST
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கான வரைவுத் திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் பள்ளிகளில் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.மத்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு முயற்சிக்கு தமிழகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது Read More
May 28, 2019, 08:48 AM IST
தமிழகத்தில் காலியாக இருந்த 22 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இந்த 22 தொகுதிகளின் தேர்தல், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசுக்கு வாழ்வா? சாவா?போராட்டம் போல் இருந்தது. குறைந்தது 9 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆட்சி நீடிக்கும் என்ற நிலையில் திமுகவுடன் கடும் பலப்பரீட்சை நடத்தியது அதிமுக. இதனால் இந்த 22 தொகுதிகளின் முடிவை தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்தது. Read More
May 22, 2019, 10:36 AM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்தாண்டு இதே நாளில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். ஓராண்டு நிறைவையொட்டி உயிரிழந்தவர்களுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் Read More
May 21, 2019, 16:42 PM IST
திமுகவில் முன்பு ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த மூத்த நிர்வாகி ஆர்.டி.சீத்தாபதி காலமானார். தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் Read More
May 21, 2019, 12:23 PM IST
உத்தரபிரதேசத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, பகுஜன்சமாஜ்- சமாஜ்வாடி கட்சி தொண்டர்கள் திடீர் போராட்டத்தில் குதித்தனர் Read More
May 21, 2019, 08:20 AM IST
மேற்கு வங்கத்தில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் விடிய, விடிய காவல் காத்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் 34 இடங்களையும், காங்கிரஸ் 4 இடங்களையும், கம்யூனிஸட், பா.ஜ.க. கட்சிகள் தலா 2 இடங்களையும் கைப்பற்றின. இந்த முறையும் அதே அளவுக்கு வெற்றி பெற முடியும் என்று மம்தா நினைக்கிறார். காரண Read More