சென்னை: போலி நகைகளை கொடுத்து பணம் கேட்ட 2 பெண்கள் கைது

சென்னை அபிராமபுரம் ராமன் சாலையில், இரண்டு பெண்கள் தங்க கொலுசுகள் மற்றும் தங்க செயின் ஆகியவற்றை வைத்துக்கொண்டு, நாங்கள் வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். சென்னைக்கு ஒரு வேலையாக வந்தோம். அவசர தேவையாக பணம் தேவைப்ப்படுகிறது என அங்கு வருவோர் போவோரிடம் அடகு கடை எங்கு இருக்கிறது எனக் கேட்டதுடன் நகைகளை வைத்து பணம் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மேலும், அடகு கடை இல்லை என்றாலும் பரவாயில்லை நகைகளை நீங்கள் வைத்துக்கொண்டு கணிசமான தொகை கொடுத்தால் சில தினங்களில் மீட்டு கொள்வோம் என்றும் கூறியுள்ளனர். Read More