மாணவனுடன் தகாத உறவு - அமெரிக்காவில் ஆசிரியையை போட்டுக் கொடுத்த ஆப்

ஆசிரியையை போட்டுக் கொடுத்த ஆப்

அமெரிக்காவில் அரிசோனா மாநிலம் குட்இயரை சேர்ந்தவர் பிரிட்டானி ஸமோரா. 27 வயதான இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு (6வது கிரேடு) ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

அந்த வகுப்பில் படித்து வந்த மாணவன் ஒருவனின் தந்தை, ஆசிரியை ஸமோரா தன் மகனுக்கு தவறான படங்கள், செய்திகளை அனுப்புவதாக பள்ளி முதல்வரிடம் புகார் செய்தார்.

ஆசிரியை அம்மாணவனுக்கு சார்பான முடிவுகளை எடுப்பதாக ஏனைய மாணவர்களிடமிருந்து ஏற்கேனவே முதல்வருக்கு தகவல் கிடைத்திருந்தது. பள்ளி முதல்வர் அளித்த புகாரின்பேரில் குட்இயர் காவல்துறை நடவடிக்கை எடுத்தது.

கடந்த பிப்ரவரி முதல் 13 வயது மாணவனை தகாத உறவுக்கு தூண்டியதும், இருவருக்குமிடையே தவறான தொடர்பு இருப்பதும் விசாரணையில் உறுதியானது.

மார்ச் 22 முதல் ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை தன் மகனுக்கு தவறான படங்களை அனுப்பி, உறவுக்கு அழைத்ததை 'செண்ட்ரி பேரண்டல் கண்ட்ரோல்' என்ற செல்போன் செயலி மூலம் அறிந்து கொண்டதாக மாணவனின் தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மாணவனுடன் தகாத உறவு - அமெரிக்காவில் ஆசிரியையை போட்டுக் கொடுத்த ஆப் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருமண விழாக்களில் தொடரும் துப்பாக்கி சூடு சம்பவங்கள்:மணமகன் பலி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்