மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலிக்கு மெழுகு சிலை

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உலகில் உள்ள அரசியல், சினிமா, விளையாட்டு உள்பட பல பிரபலங்களில் மெழுகு சிலைகள் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தத்ரூபமாக செய்யப்படும் இந்த மெழுகு சிலை பார்வையாளர்களை வெகுவாக ஈர்க்கிறது.

குறிப்பாக, மகாத்மா காந்தி, அப்துல் கலாம், பிரதமர் நரேந்திர மோடி, கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின், கபில் தேவ், கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளிட்டோரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை நேற்று மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அச்சு அசலாக உள்ள விராட் கோலியின் சிலையை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

You'r reading மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலிக்கு மெழுகு சிலை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அமெரிக்கா - நைட் கிளப்பில் தவறி விழுந்த துப்பாக்கி.. அசம்பாவிதம்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்