செய்திதாள் படித்தப்படி பேருந்தை இயக்கிய ஓட்டுநர்

செய்திதாள் படித்தப்படி பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்

சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர் ஒருவர் நாளிதழ் படித்தப்படி பேருந்தை இயக்கிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடியில் இருந்து திருவான்மியூர் நோக்கி மாநகர பேருந்து ஒன்று இயக்கப்பட்டது. அம்பத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, ஓட்டுநர் செய்தித்தாள் படித்தப்படி பேருந்தை இயக்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவரிடம் கேட்டபோது, அதை ஓட்டுநர் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

பேருந்தில் இருந்த பயணி ஒருவர், தனது செல்போனில் படம்பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சம்பந்தப்பட்ட ஓட்டுநர் யார் என்பதை கண்டறிந்து அவர் மீது துறை ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

விதிகளை பின்பறி முன் மாதிரியாக இருக்க வேண்டிய போக்குவரத்து ஊழியர்களே, இது நடந்து கொள்வது தவறானது எனவும், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You'r reading செய்திதாள் படித்தப்படி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஹெச்-1பி விசா கட்டுப்பாடு - இந்தியா திரும்புவார்களா ஐ.டி. எஞ்ஜினியர்கள்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்