பருக்கள் இருந்த தடையமே தெரியாமல் போக இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துங்கள்..

இந்த காலத்து பெண்கள், ஆண்கள் என இருவருமே பருக்களால் அவதிப்படுகிறார்கள். இதனால் முகத்தில் எதோ அழகு குறைந்தது போல எண்ணுகிறார்கள். சிலர் பருக்களால் தன்னம்பிக்கை இழந்து வெளியே வர கூட அஞ்சுகிறார்கள். இதை எல்லாம் கட்டுப்படுத்துவதற்கு சூப்பரான தீர்வு உள்ளது. இதனை ஆண்கள் பெண்கள் என இருவருமே இதனை பயன்படுத்தலாம். இதனை யூஸ் பண்ணுவது மூலம் எந்த வித பக்கவிளைவுகளும் ஏற்படாது.. இந்த மாஸ்க் எல்லா வகையான சருமத்திற்கும் உடனடி தீர்வை தேடித்தரும்.. மற்றும் முகம் சுத்தமாகவும் வேற எந்த வித பிரச்சனையும் ஏற்படுத்தாது..

தேவையான பொருள்கள்:-
புதினா இலை -4 ஸ்பூன்
தயிர் -1 ஸ்பூன்
பூண்டு -4 பற்கள்
தேன் -1 ஸ்பூன்
எலுமிச்சை சாறு-1 ஸ்பூன்

செய்முறை:-
முதலில் புதினா இலையை நன்றாக தண்ணீரில் அலசி எடுத்து கொள்ளவும். பிறகு மிக்சியில் புதினா இலை, பூண்டு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும். அரைத்ததை ஒரு பௌலில் மாற்றி அதில் தயிர், தேன், எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக ஒன்றோடு ஒன்று சேரும் படி கலந்து கொள்ளவும்.

முகத்தில் இருக்கும் பருக்களின் மேல் கலந்த பேஸ்ட்டை தடவி இரவு முழுவதும் உலர விட வேண்டும். இதனை தினமும் இரவு தவறாமல் செய்து வந்தால் பருக்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்து விடும்...

You'r reading பருக்கள் இருந்த தடையமே தெரியாமல் போக இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்துங்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நுரையீரலை சளியில் இருந்து பாதுக்காக்க பூண்டு பால் குடியுங்கள்.. உடனடி தீர்வு காணலாம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்