பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்..

பிக் பாஸ் சீசன் 4 கடந்த ஞாயிற்று கிழமையோடு நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் மக்களின் மனதை கவர்ந்தது மட்டுமில்லாமல் 17 கோடி ஓட்டு பெற்று ஆரி அர்ஜுனன் ஆபார வெற்றி பெற்றார். ஒருத்தர் இவ்வளவு ஓட்டு பெற்று வெற்றி பெற்றது பிக் பாஸ் வரலாற்றிலே இது தான் முதல் முறை என்று பலரும் ஆரியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

இந்நிலையில் இவரை பற்றி ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக் பாஸில் ஆரி சம்பாதித்த சம்பளம் 1 கோடி என்று ஊடகம் முழுவதும் பரவிவருகிறது. இவருக்கு ஒரு நாளைக்கு பேசப்பட்ட சம்பளம் 85,000 ஆகும். இவர் இந்நிகழ்ச்சியில் 105 நாளும் முழுவதுமாக இருந்ததால் மொத்தமாக 89 லட்சத்து 25 வழங்கப்பட்டுள்ளது. இதில் வரியெல்லாம் கழித்து 62,42,500 ரூபாய் அவரது கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் ஜெயித்த 50 லட்சத்தில் வரி ஒருபக்கம் போக 30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 97,47,500 ரூபாயை ஆரி சம்பளமாக பெற்றுள்ளார். அது மட்டும் இல்லாமல் பிக் பாஸில் இருந்து வெளிய வந்தவுடன் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் இவரது அன்பு மிகுந்த ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

You'r reading பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு அடித்த ஆஃபர்.. 105 நாளில் 1 கோடி சம்பளம்.. வாயைப்பிளக்கும் ரசிகர்கள்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்