மீண்டும் சரியத் தொடங்கிய தங்கத்தின் விலை! 29-12-2020

கடந்த அக்டோபர் மாதம் முதலே இறங்கத்தொடங்கிய தங்கத்தின் விலை, நவம்பர் மாதத்தில் ஆதாலபாதாளத்திற்கு சென்றது. கொரோனா நோய்த்தொற்றின் தொடக்கத்தில் வரலாறு காணாத உயரத்திற்குச் சென்ற தங்கத்தின் விலையானது, பொது முடக்கத்திலிருந்து கட்டுப்பாடான தளர்வுக்கு மக்கள் மெல்லத் திரும்பத் தொடங்கியபோது விலை வீழ்ச்சி அடைய ஆரம்பித்தது. வல்லரசு நாடுகளின் பொருளாதார சிக்கலைத் தீர்ப்பதற்காக உலக நாடுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருவதும், பொருளாதார மந்த நிலையும் தான் வீழ்ச்சிக்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் வெகுஜன மக்கள் ஆர்ப்பரிப்பில் உள்ளனர்‌.ஆனால் முதலீட்டாளர்கள் இடையே இந்த விலை வீழ்ச்சி பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாத இறுதிவரை குறைந்து கொண்டே இருந்த தங்கத்தின் விலையானது, இன்றும் சந்தை இறக்கத்துடன் தொடங்கி உள்ளது. நேற்று ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.4728 க்கு விற்பனையானது. இன்று ஆபரணத்தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.12 குறைந்து, கிராமானது ரூ.4716 க்கு விற்பனையாகிறது.

ஆபரணத்தங்கம் (22k)

1கிராம்- 4716
8 கிராம் (1 சவரன்) - 37728

துய தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்திலேயே இருந்தது. நேற்று ஒரு கிராம் தூய தங்கத்தின் விலையானது ரூ.5112 க்கு விற்பனையானது. இன்று தூய தங்கத்தின் விலை கிராமிற்க்கு ரூ.12 உயர்ந்து, கிராமானது ரூ.5100 க்கு விற்பனையாகிறது.

தூய தங்கம்(24k)

1 கிராம் - 5100
8 கிராம் - 40800

வெள்ளியின் விலை

தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்தாலும், வெள்ளி ஓரளவிற்குச் சந்தையில் தாக்குப்பிடிக்கும். இன்று வெள்ளியின் விலையானது, நேற்றைய விலையில் கிராமிற்கு 30 பைசா குறைந்து, இன்று கிராமானது ரூ.72.30 க்கு விற்பனையாகிறது. எனவே ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.72300 க்கு விற்பனையாகிறது.

You'r reading மீண்டும் சரியத் தொடங்கிய தங்கத்தின் விலை! 29-12-2020 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆரோவில் காட்டில் கொத்துக் கொத்தாய் மடிந்த பறவைகள்...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்