சிம்புவின் அடுத்தப் படம் பற்றிய புதிய தகவல்

simbu to act in kannada remake movie

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்துக்குப் பிறகு, வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. இந்தப் படத்திற்குப் பிறகு சிம்பு நடிக்கவிருக்கும் புதிய படம் பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

சிம்பு, தற்பொழுது ஹன்சிகாவின் 50வது படமான ‘மஹா’வில் கெஸ்ட் ரோலில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. அதன்பிறகு வெங்கட்பிரபுவின் மாநாடு படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடந்துவருகிறது. ஒரு பக்கம் நடிகராகவும் மறுபக்கம் இசையமைப்பாளராகவும் செம பிஸியாக இருக்கும் சிம்புவை கன்னடத்தில் பெரும் ஹிட்டான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

ஏற்கெனவே, தெலுங்கில் பவன்கல்யாண் நடிப்பில் வெளியான அத்திரண்டிகி தாரேதி படத்தின் தமிழ் ரீமேக்கே வந்தா ராஜாவாதான் வருவேன். அடுத்ததாக கன்னட படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்புவை நடிக்க, சிம்புவிடன் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. அந்த படத்தில் ஸ்ரீமுரளி நடித்த கேரக்டரில் தான் சிம்புவை நடிக்கவைக்க முயன்றுவருகிறார்கள். மேலும் புனித் ராஜ்குமார் கதாபாத்திரத்தில் முன்னணி நடிகர்களிடமும் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்படுகிறது.

சிம்பு நடிக்கவிருக்கும் கன்னட ரீமேக் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறடு. மேலும் படம் குறித்தும், யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்பது குறித்த தகவல் விரைவில் வெளியாகும்.

You'r reading சிம்புவின் அடுத்தப் படம் பற்றிய புதிய தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - வைரலாகும் சூர்யாவின் செல்பி.. காரணம் என்ன தெரியுமா

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்