எந்த நடிகையும் செய்யாத சாதனையை நான் செய்துள்ளேன் ராதிகா

Radhika shared about her success

சின்னத்திரை வரலாற்றில் நடிகை ராதிகா புதிய மைல்கல்லை அடைந்திருக்கிறார். அதனை மகிழ்ச்சியுடன் ராதிகாவே தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து பெண்களின் மனதில் இடம்பிடித்தவர் ராதிகா. சின்னத்திரையில் வெற்றி வாகை

சூடியவர். ராடன் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக, பல நெடும் தொடர்களை கொடுத்தவர். 'சித்தி', 'அண்ணாமலை', 'செல்வி', 'வாணி ராணி' என அவர் காதாநாயகியாக நடித்த சீரியல்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட். அதுமட்டுமல்ல,  'சின்ன பாப்பா பெரிய பாப்பா', 'சிவமயம்', 'ருத்ரவீணை' போன்ற காமெடி மற்றும் த்ரில் தொடர்கள் பலவற்றை தயாரித்த பெருமை அவரை சேரும்.

இந்நிலையில் ``அதிகமான சீரியல் எப்பிசோடுகளில் நடித்த ஒரே நடிகை நான் தான்’’  என நடிகை ராதிகா இன்று ட்விட்டரில் பெருமகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

ராதிகாவின் ட்விட்டர் பதிவில், "இதுவரை நான் 6,850 எப்பிசோடுகளில் நடித்துள்ளேன். அதாவது தொலைக்காட்சியில் மட்டும்  3,430 மணிநேரங்கள் ஓடியிருக்கிறது. இப்படி நடித்துள்ள ஒரே நடிகை நான் தான் என்பதில் பெருமைகொள்கிறேன். அடுத்த இரண்டு மாதங்களுக்கு ஒரு சின்ன  பிரேக் எடுக்கிறேன். அதன் பிறகு ஜூன் மாதத்தில் இருந்து ஒரு புதிய பரிமாணத்தில் என்னை மீண்டும் சன் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்குக் காண்பீர்கள். உங்கள் அனைவரின் பேரன்புக்கு நன்றி," என்று குறிப்பிட்டிருக்கிறார்.

 

You'r reading எந்த நடிகையும் செய்யாத சாதனையை நான் செய்துள்ளேன் ராதிகா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கதையில் சிறு மாற்றம்! - நேர் கொண்ட பார்வை லேட்டஸ்ட் அப்டேட்ஸ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்