சிக்கல் வந்தாலும் பரவால்ல.. செல்வராகவன் படம் பண்ணுவேன் - ஜெயம் ரவி துணிச்சல் முடிவு

Jayam Ravi next film with Selvaraghavan

செல்வராகவனின் அடுத்தப் படத்தில் நாயகனாக ஜெயம்ரவி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


சூர்யா நடிப்பில் செல்வாராகவன் தற்பொழுது இயக்கியிருக்கும் என்.ஜி.கே. படம் மே 31-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சூர்யாவுடன் சாய்பல்லவி, ரகுல் ப்ரீத் சிங், ஜெகபதி பாபு, மன்சூர் அலிகான், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். பல போராட்டங்களுக்குப் பிறகே, இந்தப் படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் மட்டுமின்றி, செல்வராகவன் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை, மன்னவன் வந்தானடி உள்ளிட்ட படங்கள் முடிந்துவிட்ட நிலையிலும் ரிலீஸாக முடியாமல் உள்ளது.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கும் அடுத்தப் படத்தில் ஜெயம்ரவி நாயகனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. செல்வராகவன் படமென்றாலே உச்ச நடிகர்கள் கொஞ்சம் யோசிப்பது வழக்கம். ஏனெனில் செல்வாவின் ஸ்டைல் அப்படி. தவிர, செல்வா ராசிக்கு படம் வெளியாவதில் எப்பொழுதுமே சிக்கல் நீடிக்கும். ஆனால் ஜெயம்ரவி துணிந்து முடிவெடுத்திருப்பதாகவும், ஜெயம்ரவியை செல்வா கூறிய கதை ஈர்த்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

You'r reading சிக்கல் வந்தாலும் பரவால்ல.. செல்வராகவன் படம் பண்ணுவேன் - ஜெயம் ரவி துணிச்சல் முடிவு Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மூடர்கூடம் நவீன் திருமணம் பற்றி எழுந்த சர்ச்சைகள்.. உண்மை இதுதான்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்