ஓட்டுப் போட வராம வீட்டில் தூங்குகிறாரா சிம்பு? டி.ஆர் பதிலை கேட்ட ரசிகர்கள் கலாய்!
simbu dont cast his vote fans trolled him
இன்று காலை முதல் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள், முன்னணி நடிகர்கள் பொதுமக்கள், வயது முதிர்ந்த பாட்டி, தாத்தா, மாற்றுத் திறனாளிகள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையான ஓட்டினை போட்டுச் செல்கின்றனர்.
இன்னும் பலர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற நீண்ட வரிசையில் வெயில் என்றும் பாராமல் காத்து நிற்கின்றனர்.
ஆனால், நடிகர் சிம்பு முக்கியமான வேலை இருப்பதால், ஓட்டுப் போட வரவில்லை என வாக்குச்சாவடிக்கு ஓட்டுப் போட வந்த அவரது தந்தையும் நடிகருமான டி.ராஜேந்தர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவுக்கு கீழே, “ஓட்டுப் போட வராம வீட்டில் தூங்குகிறாரா சிம்பு” என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
பள்ளிகளின் சிஸ்டம் சரியில்லை, அதனால் தனக்கு குழந்தைகள் பிறந்தால் பள்ளிக்கு அனுப்பமாட்டேன் என சிம்பு கூறியது போல, வாக்களிப்பது பிடிக்காமல் ஓட்டுப் போட வரவில்லை என சிம்பு ரசிகர்கள் சிலர் முட்டுக் கொடுத்தாலும், அப்போ வந்து நோட்டாவுக்காக ஓட்டுப் போடலாம் அல்லவா என்றும், இன்று திரையரங்குகள் மற்றும் திரையுலக வேலைகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இவரு மகன் சிம்புவுக்கு மட்டும் எங்க வேலை செய்கிறார் என்றும் கமெண்டுகள் தீப்பொறியாய் பறக்கின்றன.
You'r reading ஓட்டுப் போட வராம வீட்டில் தூங்குகிறாரா சிம்பு? டி.ஆர் பதிலை கேட்ட ரசிகர்கள் கலாய்! Originally posted on The Subeditor Tamil