அண்ணியுடன் த்ரில் அனுபவம்... மகிழ்ச்சியுடன் பகிர்ந்த நடிகர் கார்த்தி

Actor karthi shares about his film with jyothika

கார்த்தி - ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ரிலீஸ் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது.



 

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர குடும்பம் என்றல் அது நடிகர் சிவக்குமார் குடும்பம் தான். நடிகர் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் அவருடைய சகோதரர் நடிகர் சூர்யா தோன்றினார். அந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனையடுத்து தற்போது, அண்ணி ஜோதிகாவுடன் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ளார் கார்த்தி. அதுவும் கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். முக்கியத்துவம் வாய்ந்த கதாபத்திரங்களில் ஜோதிகா தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அதே போன்றதொரு படத்தில் ஜோதிகாவும் கார்த்தியும் சேர்ந்து நடிக்கவுள்ளனர். 'பாபநாசம்' படத்தின் இயக்குனர் ஜீத்துஜோசப் இந்த படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கி நடக்கிறது. படப்பிடிப்பு தொடங்குவதை முன்னிட் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளத்தை அறிவித்துள்ளனர். போஸ்டரின் மலை, காடு நிறைந்த பகுதியில் கார்த்தியின் முகம் தெரிகிறது. ‘’அண்ணியுடன் சேர்ந்து நடிப்பது த்ரில்லிங் அனுபவத்தை கொடுக்கும். சத்யராஜ் சார் எங்கள் குழுவில் இருப்பது மிகப்பெரிய பலம்’’ என மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் கார்த்தி.

இலங்கையில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டில் 15 சடலங்கள்; வெடிமருந்து குவியலும் கண்டுபிடிப்பு

You'r reading அண்ணியுடன் த்ரில் அனுபவம்... மகிழ்ச்சியுடன் பகிர்ந்த நடிகர் கார்த்தி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சட்டென்று மாறியது...! புயல் தமிழகத்தை நெருங்காதாம் மக்களே...!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்