உங்களை சேர்ந்து திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்... கார்த்திக்கு வாழ்த்து சொன்ன சூர்யா

Suriya wishes jyothika and karthi for their upcoming movie

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது.

கமல்ஹாசன், கெளதமி நடிப்பில் தமிழில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் பாபநாசம். இது, மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் பட ரீமேக். இப்படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் தமிழில் கார்த்தியை வைத்து படம் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று (ஏப்ரல் 27) தொடங்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முதன்முறையாக கார்த்தியும், அவரின் அண்ணி ஜோதிகாவும் ஒரே படத்தில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

“ அண்ணியுடன் சேர்ந்து நடிப்பது த்ரில்லாக இருக்கிறது” என்று இப்படம் குறித்து கூறியுள்ளார் கார்த்தி. அதற்கு பதிலளிக்கும் வகையில் “இந்தப்படம் மிகவும் சிறப்பானதாக அமையும், ஜோவையும் உன்னையும் சேர்ந்து திரையில் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன், இருவருக்க்கும் வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார் சூர்யா.

வயாகாம் 18 நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் இப்படத்தை தயாரிக்கிறது. ஒரே கட்டமாக படத்தை முடிக்கவும் படக்குழு திட்டம். இப்படத்தை முடித்த பிறகு தான், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் கார்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading உங்களை சேர்ந்து திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்... கார்த்திக்கு வாழ்த்து சொன்ன சூர்யா Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நம்மிடம் வேலைப் பார்க்கும் நிர்வாகி எப்படி விஷாலை தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தார்? - பேரதிர்ச்சியில் தனுஷ்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்