ரஜினியின் தர்பார் பட காட்சிகள் லீக்காக என்ன காரணம் தெரியுமா?

rajini darbar stills leaked and why

ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிவரும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடந்துவருகிறது.



ரஜினி, நயன்தாரா, யோகிபாபு கலந்துகொண்ட முதல் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்துவருகிறது. தொடர்ச்சியாக மூன்று மாதம் படத்தின் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. யோகிபாபு மீது ரஜினி கைபோட்டிருக்கும் காட்சி, ரஜினி கிரிக்கெட் விளையாடும் காட்சி, நயன்தாரா படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிவிட்டதால் தயாரிப்பு தரப்பும், இயக்குநரின் தரப்பும் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

பொதுவாக ரஜினியின் படப்பிடிப்பென்றாலே கடும் கிடுக்குப் பிடி இருக்கும். அத்தனை எளிதில் யாரும் புகைப்படமெடுத்து விட முடியாது. அத்தனை பாதுகாப்புகளை மீறியும் புகைப்படம் வெளியாக என்ன காரணம்? படப்பிடிப்பு நடக்கும் இடம்தான் என்று கூறுகிறார்கள். ஏனெனில் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடக்கிறதாம். அந்தக் கல்லூரி மாணவர்கள் தான் ஆர்வமிகுதியில் படப்பிடிப்பை செல்போனில் படமெடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்களாம். மாணவர்களைக் கட்டுப்படுத்த ஒரு பக்கம் முயற்சி நடந்துவருகிறது. அது சரிவரவில்லையெனில் படப்பிடிப்பு பகுதியையே மாற்றிவிடவும் திட்டமாம்.

You'r reading ரஜினியின் தர்பார் பட காட்சிகள் லீக்காக என்ன காரணம் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சத்து நிறைந்த ஸ்வீட் கார்ன் மாதுளை சாலட் ரெசிபி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்