லாரன்ஸுடன் போட்டிப்போடும் சுந்தர் சி.. விரைவில் அரண்மனை 3

Sun pictures to produce Aranmanai 3 with Sundar C

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் உருவாகும் என்று தெரிகிறது.

அரண்மனை படத்தின் இரண்டு பாகங்கள் வெளியாகி பெரும் ஹிட்டானது. இப்படங்களை இயக்கிய சுந்தர்.சி மூன்றாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஹாலிவுட்டில் ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதன் சீக்குவல்கள் வெளியாகிவிடும்.
அதே ஃபார்முளாவில் தமிழிலும் பல படங்களுக்கு சீக்குவல் வந்திருக்கிறது. சூர்யாவின் சிங்கம் படம் மூன்று பாகங்கள் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில் வெளியான காஞ்சனா 3 படமானது முனி பட சீக்குவலின் நான்காவது பாகம். விஐபி 2, எந்திரனின் 2.0, சாமி 2, சண்டகோழி 2, பில்லா 2, சார்லிசாப்ளின் 2 என இரண்டு பாகங்கள் கொண்ட படங்களின் லிஸ்டை அடுக்கிக் கொண்டே போகலாம். பொதுவாக முதல் பாகம் பெறும் வெற்றியை அடுத்தடுத்த பாகங்கள் பெறுவதில்லை.

இந்நிலையில் சுந்தர்.சியும் அரண்மனை எங்கிற பெயரில் இரண்டு பாகங்கள் எடுத்துவிட்டார். பேய் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு. இரண்டு பாகங்களும் நல்ல வசூலை பெற்றுவிட்டதால் மூன்றாம் பாகத்தை இயக்க முடிவெடுத்திருக்கிறார். இரண்டாம் பாகத்தில் நடித்த த்ரிஷா, ஹன்சிகா மூன்றாம் பாகத்தில் நடிப்பாரா அல்லது வேறு நடிகைகளா என்பது இன்னும் உறுதியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

You'r reading லாரன்ஸுடன் போட்டிப்போடும் சுந்தர் சி.. விரைவில் அரண்மனை 3 Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அஜித்திடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லை... பாலிவுட்டுக்கு தாவும் விஷ்ணுவர்தன்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்