சீனியர் இயக்குநர் மணிரத்னத்துக்கு இது முதல்முறை! பொன்னியின் செல்வன் எக்ஸ்க்ளூசிவ் தகவல்

Mani Ratnams Ponniyin Selvan to kick start soon

மணிரத்னத்தின் நீண்ட நாள் திட்டமான பொன்னியின் செல்வன் விரைவில் படமாக்க சாத்திய கூறுகள் நெருங்கி வருகிறது.

அமரர் கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் கதையை மையமாக கொண்டு படத்தை இயக்க நீண்ட நாட்களாக திட்டமிட்டு0. வந்தார் மணிரத்னம். சில காரணங்களால் படம் தொடங்க முடியாமல் இருந்தது. ஆனால் இந்த முறை கொஞ்சம் தீவிரமாகவே களம் இறங்கினார். அதற்கான நடிக நடிகைகள் கூட உறுதியாகினர்.

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் மற்றும் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகிய இந்தி நட்சத்திரங்களையும் வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்க தயாராகிவருகிறார் மணிரத்னம். இப்படத்துக்கான முதல்கட்ட பணிகள் நடந்துவருகிறது. படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. படத்துக்கான பட்ஜெட்டாக மணிரத்னம் 225 கோடி ரூபாய் திட்டமிட்டிருக்கிறார்.

பொதுவாக மணிரத்னம் சொன்ன பட்ஜெட்டுக்குள் படமெடுப்பவர். தவிர, அவரின் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக பொன்னியின் செல்வன் இருக்கவிருக்கிறது. பட்ஜெட் விஷயத்தில் ஷங்கர் எங்கேயோ இருக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் கூட பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணுகிறார். ஆனால் மணிரத்னம் இப்பொழுது தான் ஒரு பெரிய தொகையை பட்ஜெட்டாக படமெடுக்க விருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை விரைவில் படக்குழு அறிவிக்கலாம். அதற்காக காத்திருப்போம்.

தீப்பிடித்த ரஷ்ய விமானம் ..! 37 பேரை காப்பாற்றிய விமானி...! கடைசி ஆளாக குதித்த துணிச்சல்..!

You'r reading சீனியர் இயக்குநர் மணிரத்னத்துக்கு இது முதல்முறை! பொன்னியின் செல்வன் எக்ஸ்க்ளூசிவ் தகவல் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சங்கத்தமிழனாக மாறிய விஜய்சேதுபதி; விஜய் சந்தருக்கு இந்த படமாவது வெற்றியை கொடுக்குமா?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்