வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் கிண்டல் செய்ய வேண்டாம் வித்யா பாலன்

Dont troll someone for their colour and body weight says vidya balan

நிறத்தையும், உடல் எடையையும் கொண்டு யாரையும் கிண்டல் செய்ய வேண்டாம் என நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார். 

பாலிவுட் பிரபலம் ஆவதற்கு முன்னதாக தமிழில் கனா கண்டேன் படத்தில் அறிமுகமானவர் நடிகை வித்யா பாலன். தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்த அவரை, இங்குள்ள சில இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், உடல் பருமனாக உள்ளீர்கள் என கிண்டல் செய்து அவரது மன வலிமையை சிதைத்துள்ளதாக சமீபத்தில் வித்யா பாலன் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது தனித் திறமையை நிரூபிக்க போராடியதாகவும், பாலிவுட்டில் தனக்கென்ற அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும், ஆனால், இன்னமும் சிலர் உடல் பருமன் மற்றும் நிறத்தை வைத்து மற்றவர்களை கிண்டல் செய்வதை வாடிக்கையாகி வருகின்றனர். அவர்கள் அதனை நிறுத்திக் கொள்ளவேண்டும். இந்த உலகில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறமை உண்டு.

மனிதர்களை மனிதர்களாக பாருங்கள், அவர்களது வெளித்தோற்றத்தை வைத்து கிண்டல் மற்றும் கேலி செய்யாதீர்கள் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தமிழில் மீண்டும் களமிறங்கியுள்ளார் வித்யா பாலன்.  

You'r reading வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் கிண்டல் செய்ய வேண்டாம் வித்யா பாலன் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பள்ளிக் கட்டடம் கட்ட 5 லட்சம் கொடுங்க; மருத்துவ பல்கலை.க்கு ஐகோர்ட் உத்தரவு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்