அருவி இயக்குநருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan join hands with Aruvi Movie Director

இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியான அருவி படம் இந்தியளவில் பாராட்டுக்களை குவித்தது. ஏய்ட்ஸ் நோயாளியாக அறிமுக நாயகி அதிதி பாலன் பலரையும் அழவைக்கும் படி நடித்திருந்தார்.

அருவி படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரத்தை தொடர்ந்து, அடுத்து அருண்பிரபு புருஷோத்தமன் எந்த படத்தை இயக்கவுள்ளார் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருந்தது.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 3வது தயாரிப்பு படத்தை அருண்பிரபு இயக்கவுள்ளதாகவும், அந்த படத்திற்கு ‘வாழ்’ என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளதாக, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை வெளியிட்டு சிவகார்த்திகேயன் தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.

அருவி பட இயக்குநர் அடுத்த படத்தை சிவகார்த்திகேயன் பேனரில் இயக்கப் போகும் விஷயம் அறிந்த பலரும் அருவி பட இயக்குநருக்கு வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.
இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading அருவி இயக்குநருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுகவில் சேருகிறாரா தங்கத்தமிழ்ச்செல்வன்?

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்