பிளைண்ட் ரீமேக்கில் நெற்றிக்கண் திறக்கும் நயன்தாரா!

Nayanthara Next movie Titled Netrikann

கொரியன் படமான பிளைண்ட் படத்தின் ரீமேக்கில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்திற்கு நெற்றிக்கண் என டைட்டில் வைத்துள்ளனர்.

ரஜினியின் நெற்றிக்கண் படத்தின் டைட்டில் இப்போது நயன்தாராவின் புதிய படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தை நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் தயாரிக்கிறார். நானும் ரவுடி தான் படத்தின் நினைவாக ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை விக்னேஷ் சிவன் உருவாக்கி தனது முதல் தயாரிப்பை நயன்தாராவை வைத்தே தயாரிக்கிறார்.

அவள் படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இந்த படத்தை இயக்குகிறார். கொரியன் படமான பிளைண்ட் படத்தின் ரீமேக் தான் இந்த படம். அந்த படத்தின் நாயகி பார்வையற்றவராக இருப்பார். அதனால், இந்த படத்திலும் நயன்தாரா பார்வையற்றவராக இருந்து, தனக்கு நேர்ந்த துன்பங்களுக்கு எதிராக எப்படி போராடி அவர்களை பழிவாங்கினார் என்பதே படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பார்வையற்ற நாயகி ஆடும் வேட்டை என்பதால், படத்திற்கு நெற்றிக்கண் என்ற டைட்டில் பொருத்தமாக இருக்கும் என இந்த பெயரை சூட்டியுள்ளனர்.

மிலிந்த் ராவ் இயக்கும் இந்த படத்திற்கு கார்த்தி கணேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.

அவள் படத்தை போல இந்த படமும் பயங்கர த்ரில்லர் படமாகவும் ஹாலிவுட் மேக்கிங் உடனும் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You'r reading பிளைண்ட் ரீமேக்கில் நெற்றிக்கண் திறக்கும் நயன்தாரா! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நான்கு நாயகிகளுடன் உலக காதலரான விஜய் தேவரகொண்டா!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்