விஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு.. 3 கோடி செக் மோசடி வழக்கு..

Warrant against Ameesha Patel in cheque bounce case

விஜய் நடித்த புதிய கீதை படத்தில் நாயகியாக நடித்தவர் அமீஷா பட்டேல். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

அமிஷா படேல், குணால் குரூமர் என்பவருடன் இணைந்து இந்தி படமொன்றை தயாரிக்க முடிவு செய்தார். இதற்காக அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கி இருந்தனர். படம் 2018-ல் திரைக்கு வரும் என்றும் அப்போது பணத்தை திருப்பி தந்து விடுவதாகவும் அமீஷா பட்டேல் கூறியுள்ளார். ஆனால் படம் திட்டமிட்டபடி திரைக்கு வரவில்லை. இதனால் அஜய்குமார் சிங் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதற்காக வட்டியையும் சேர்த்து ரூ.3 கோடிக்கு அமிஷா பட்டேல் செக் கொடுத்துள்ளார். அதை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது.

இதையடுத்து அஜய்குமார் கோர்ட்டில் அமீஷா பட்டேல் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ராஞ்சி கோர்ட்டு அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்தது.

You'r reading விஜய் பட நடிகைக்கு பிடி வாரண்டு.. 3 கோடி செக் மோசடி வழக்கு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரியா பட விழாவில் ஜோதிகாவின் ராட்சசி...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்