ஏஞ்சலினாவுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யாராய்

Aishwarya Rai Bachchan lend her voice to Angelina Jolie

ஹாலிவுட் ஹீரோக்களுக்கு இணையாக ஆக்‌ஷன் காட்சிகளில் தூள் கிளப்புபவர் ஏஞ்ச்லினா ஜோலி. அவர் நடித்துள்ள டார்க் பேன்டஸி அட்வென்சர் படமாக உருவாகியிருக்கிறது மேல்பிசென்ட் மிஸ்ட்ரஸ் ஆப் எவில். கற்பனை கதையான இது திகில் கலந்து உருவாகியிருக்கிறது.

இப்படம் இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. ஏஞ்சலினா ஜோலிக்கு இந்தியில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் டப்பிங் பேசுகிறார்.

ஏஞ்சலினா நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேச வந்த ஐஸ்வர்யா ராய் வெல்வெட்டில் கறுப்பு நிற உடை அணிந்திருந்தது அங்கிருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. கற்பனை கலந்த டார்க் பேன்டஸி படம் என்பதால் கதையின் தன்மைக்கு ஏற்ப அவர் கறுப்பு நிற உடையில் வந்தாராம்.

You'r reading ஏஞ்சலினாவுக்கு குரல் கொடுக்கும் ஐஸ்வர்யாராய் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அஜய்தேவ்கனுக்கு ரூ. 30 கோடி சம்பளம்? ராஜமவுலி படத்தில் நடிக்கிறார்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்