போலீசை தொடர்ந்து ஆர்.ஜேவாக மாறிய ஜோ..

நாச்சியார் படத்தை தொடர்ந்து, அடுத்து நடிக்க இருக்கும் படத்தில் ஆர்.ஜேவாக நடிக்க உள்ளாராம் ஜோதிகா.

தமிழகத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழக ரசிகர்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஜோதிகா. நடிகர் சூர்யாவை திருமணம் செய்துக் கொண்டதை அடுத்து படத்தில் நடிக்க முழுக்குப் போட்டார். குழந்தை, குடும்பம் என்று ஆன நிலையில், 36 வயதினிலே படம் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு ரீ என்ட்ரி கொடுத்தார் ஜோதிகா.

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையை பார்த்து பார்த்து தேர்ந்தெடுக்கும் ஜோதிகா, 36 வயதினிலேவிற்கு பிறகு, மகளிர் மட்டும் நடித்தார். இதைதொடர்ந்து, பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள நாச்சியார் படம் ரிலீசாகி பட்டையை கிளப்பி வருகிறது. மூன்று நாட்களில் ரூ. 6 கோடி வசூல் செய்துள்ளது நாச்சியார்.

இந்நிலையில், பாலிவுட்டில் வித்யா பாலன் நடித்து சூப்பர் ஹிட்டான தும்ஹரி சுளு என்ற படத்தை தமிழில் ரீமேக் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ரீமேக் படத்தில் நடிகை ஜோதிகா ரேடியோ ஜாக்கியாக நடிக்க உள்ளதாகவும், இதனை ராதாமோகன் இயக்கப்போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

You'r reading போலீசை தொடர்ந்து ஆர்.ஜேவாக மாறிய ஜோ.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பரீட்சையில் காப்பியடிப்பதை தடுக்க ஷு, சாக்ஸ் அணிய தடை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்