நடிகை மீரா மிதுன் மீது போலீஸார் 2 பிரிவில் வழக்கு பதிவு.. கைது நடவடிக்கை எடுக்க முடிவு...

Case against Actress Meera Mithun

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம். படங்களில் நடித்திருப்பதுடன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன்.

கடந்த 3-ந்தேதி சென்னை எழும்பூரில் உள்ள ஒரு ஓட்டலில் பேட்டி அளித்தார். அப்போது சென்னை போலீசார் பற்றி மீரா மிதுன் பல்வேறு கருத்துக்களை கூறி இருந்தார். போலீசார் லஞ்சம் வாங்கிக் கொண்டு தன் மீது பொய் வழக்குகளை போட்டுள்ளனர் என்று குற்றம்சாட்டி இருந்தார்.

போஸார் பற்றி பேடி கொடுப்பதை அங்குள்ளவர்கள் கேட்டபோது ஓட்டல் ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக மீராமிதுன் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது போலிசில் புகார் தரப்பட்டது.

புகாரின் பேரில் மீரா மிதுன் மீது அவதூராக பேசுதல், கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் அவர் மும்பையில் இருப்பதாக கூறப்படுகிறது.

You'r reading நடிகை மீரா மிதுன் மீது போலீஸார் 2 பிரிவில் வழக்கு பதிவு.. கைது நடவடிக்கை எடுக்க முடிவு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முகமூடி அணிந்து  காற்றுமாசு பற்றி அட்வைஸ் செய்த பிரியங்கா சோப்ரா...  ரசிகர்கள் கண்டிப்பால் பரபரப்பு...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்