நடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்துக்கு எதிர்ப்பு... ஐகோர்ட்டில் விஷால் தரப்பு முறையீடு...

Special Officer for Nadigar sangam

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்குகளை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்து வருகிறார். இந்த நிலையில், தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் தனி அதிகாரியாக பத்திரப்பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதா என்பவரை தமிழக அரசு நேற்று நியமித்து அறிவித்தது.
இதை எதிர்த்தும், நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார், வழக்கை அவசர வழக்காக இன்றே (வெள்ளிக்கிழமை) விசாரிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் தரப்பில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு முன்பு முறையிடப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நீதிபதி, ஏற்கனவே தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் வழக்கை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கல்யாணசுந்தரம் விசாரித்து வருகிறார். எனவே, நடிகர் சங்கத் துக்கு தனி அதிகாரி நியமனம் தொடர்பாக அவரிடம் தான் முறையிட வேண்டும் என்று கூறினார்.
பின்னர் இந்த வழக்கை நீதிபதி கல்யாணசுந்தரம் முன்பு விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி ஆதிகேசவலு உத்தரவிட்டார்.

You'r reading நடிகர் சங்க தனி அதிகாரி நியமனத்துக்கு எதிர்ப்பு... ஐகோர்ட்டில் விஷால் தரப்பு முறையீடு... Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ரொம்ப நாள் ஆச்சி மறந்தே போச்சு எமி... குழந்தையுடன் இருப்பதை கண்டு ரசிகர்கள் நலன் விசாரிப்பு...

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்