தர்பார் 3வது நாள் டப்பிங்கில் மிரட்டல் வசனம் பேசிய ரஜினிகாந்த்... ஸ்டுடியோவுக்குள்ளும் நடிக்கிறார்..

Superstar Rajinikanth Dubbing For Darbar

ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் பொங்கல் ரீலீஸாக விறுவிறுப்பாக டப்பிங் பணிகள் நடந்துவருகிறது. ரஜினிகாந்த் தனது காட்சி களுக்கு டப்பிங் பேசி வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். 3வது நாளாக ரஜினி டப்பிங் பேசுகிறார். கண்டிப்பான போலீஸ் அதிகாரி ஆதித்யா அருணாச்சலமாக ரஜினி நடிப்பதால் மிரட்டலான வசனங்கள் படத்தில் இடம் பெறுகிறது.

படப்பிடிப்பின்போது எப்படி அதிரடியாக நடித்தாரோ டப்பிங்கிலும் அதே வேகத்தில் ரஜினி டப்பிங் பேசுவார் என்பதால் அவர் டப்பிங் பேசும்போது யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை இன்னும் ஓரிருநாளில் டப்பிங் பேசி முடிக்கிறார் ரஜினி.

தர்பார் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடத்த தடபுடல் ஏற்பாடுகள் நடக்கிறது. அநேகமாக வரும் டிசம்பர் 7ந் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது திட்டமிட்டுள்ளனர்.

You'r reading தர்பார் 3வது நாள் டப்பிங்கில் மிரட்டல் வசனம் பேசிய ரஜினிகாந்த்... ஸ்டுடியோவுக்குள்ளும் நடிக்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அடுத்த மாதம் முதல் ஏர்டெல், வோடபோன் கட்டணங்கள் உயரும்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்