கே.பாக்யராஜ் பேச்சால் திடீர் சர்ச்சை.. தவறுக்கு பெண்கள் காரணம் என்கிறார்..

Women allow men to use them: Director K Bhagyaraj courts controversy

எஸ்ஆர்ஆர், ஆர்யான், உபாசனா நடித்துள்ள படம் 'கருத்துக்களை பதிவு செய்' ராகுல் பரமகம்சா டைரக்டு செய்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் திரைப்பட இயக்குனர் கே. பாக்யராஜ் பேசியதாவது:

ஆண்கள் தவறு செய்தால் போகிற போக்கில் வந்து விடுவான். பெண்கள் தவறு செய்தால் அது மிகப்பெரிய பாதிப்பு ஆகிவிடுகிறது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது என்று பேசி இருக்கிறேன். பெண்கள் கவனமாக இருந்தால் தப்பு நடக்காது. பெண்கள் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும் என்கிறார்கள்.

இன்று செல்போன் வந்துவிட்டதால் எல்லாம் மாறிக்கிடக்கிறது. எளிதாக தவறுகள் நடக்கி றது. பொள்ளாச்சியில் நடந்த சம்பவங்களுக்கு ஆண்கள் மட்டும் காரணமல்ல பெண்கள் பலவீனத்தை ஆண்கள் பயன்படுத்திக்கொள்கி றார்கள். நான் என் கருத்துக்களை தைரியமாக சொல்லிவிடுவேன்.

இயக்குனர் குருநாதர் பாரதிராஜாவிடம் பணியாற்றியபோதும் காட்சியில் ஏதாவது தவறு என்றால் உடனே சொல்லிவிடுவேன். அதற்காக அவர் கோபப்படமாட்டார்.

You'r reading கே.பாக்யராஜ் பேச்சால் திடீர் சர்ச்சை.. தவறுக்கு பெண்கள் காரணம் என்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - அயோத்தி சர்ச்சை வழக்கை படமாக்கும் ஹீரோயின்.. திரைக்கதை எழுதும் பாகுபலி இயக்குனர் தந்தை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்