போலீஸ் மீது வழக்கு போட்ட விஷால் நடிகை.. நடிகர் மீது விசாரணை நடத்தாததுபற்றி கேள்வி..

Actress Dhnusree Filed Case Against Mumbai Police

பொம்மலாட்டம், காலா போன்ற படங்களில் நடித்ததுடன் இந்தியில் பல்வேறு படங்களில் வில்லன், குணசித்ர வேடங்களில் நடித்திருப்பவ நானா படேகர். அவர் மீது மீடூ புகார் கூறினார் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் தமிழில் விஷால் ஜோடியாக தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தவர்.
சில வருடங்களுக்கு முன், ஹார்ன் ஓகே ப்ளீஸ் படத்தில் பாடல் காட்சியில் நடித்த போது நானா படேகர் தன்னிடம் சிலுமிசம் செய்து பாலியல் தொல்லை தந்தார் என்று தனுஸ்ரீ கடந்த ஆண்டு பரபரப்பான புகார் கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு மும்பை ஓஸிவாரா போலீசில் புகார் அளித்தார்.
புகாரை ஏற்று விசாரித்த போலீசார் நானா படேகருக்கு எதிரான சாட்சிகள் எதுவும் இல்லை என்று அவர் மீதான புகாரை கைவிட்டனர். இதனால் கோபம் அடைந்த தனுஸ்ரீ தற்போது போலீசாரின் இந்த முடிவை எதிர்த்து மும்பை அந்தேரி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
'நேரடி சாட்சிகளின் வாக்கு மூலம் எதையும் நானா படேகருக்கு எதிராக போலீசார் பதிவு செய்யாததுடன் சிலர் அளித்த வாக்குமூலத்தையும் நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. எனவே போலீஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கேட்டதுடன், இவ்வழக்கை குற்றப்பிரிவுக்கு மாற்றி மீண்டும் விசாரணை தொடங்க உத்தரவிட வேண்டும்' என தனுஸ்ரீ மனுவில் தெரிவித்திருக்கிறார்.

You'r reading போலீஸ் மீது வழக்கு போட்ட விஷால் நடிகை.. நடிகர் மீது விசாரணை நடத்தாததுபற்றி கேள்வி.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - உ.பி.யில் பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. மாயாவதி, அகிலேஷ் குற்றச்சாட்டு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்