மகளிர் ஆணையத்தில் பாக்யராஜ் ஆஜர்.. சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்தார்..

Bagyaraj appear before TN Womens commission

சென்னையில் 2 வாரங்களுக்கு முன் நடந்த கருத்துக்களை பதிவு செய் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் டைரக்டர் கே. பாக்யராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது,பெண்கள் இடம் கொடுப்பதால்தான் தவறு நடப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது.

எனவே பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். பொள்ளாச்சியில் நடந்த சம்பவத்திற்கு ஆண்கள் மட்டும் காரணமில்லை. அவர்கள் தவறுக்கு பெண்கள் வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள் என பேசினார். இந்த பேச்சு அவரை சர்ச்சையில் மாட்டிவிட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு ஆந்திர மகளிர் ஆணையம், தமிழக மகளிர் ஆணையத்துக்குப் பரிந்துரைத்தது.

இதையடுத்து மாநில மகளிர் ஆணையம், டிசம்பர் 2-ம் தேதி நேரில் பாக்யராஜை ஆஜராக நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பாக்யராஜ் அவகாசம் கேட்டிருந்தார். இதையடுத்து இன்று நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதையேற்று இன்று ஆஜாராகி விளக்கம் அளித்தார்.

You'r reading மகளிர் ஆணையத்தில் பாக்யராஜ் ஆஜர்.. சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் அளித்தார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சகுனியும், துரியோதனனும்.. சித்தார்த் சர்ச்சை ட்விட்.. ரஜினி ரசிகர்கள் கொதிப்பு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்