ஸ்ரீதேவி சமாதி அருகே தகனம் ஆக விரும்பும் இயக்குனர்.. சர்ச்சை டைரக்டரின் மற்றொரு சர்ச்சை..

சூர்யா நடித்த ரத்த சரித்திரா 2ம் பாகம் மற்றும் ரங்கீலா (இந்தி), லட்சுமி என்டிஆர் (தெலுங்கு) உள்ளிட்ட பலவேறு படங்களை இயக்கி இருப்பவர் ராம் கோபால் வர்மா. இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் தீவிர ரசிகர்.

ராம் கோவால் வர்மா மீண்டும் ஒரு சர்ர்சை கருத்தை வெளியிட்டுல்ளார். ரசிகர் ஒருவர் அவரிடம் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில், ”எனக்கு வாழ்வில் ஒரு மணி நேரம்தான் உயிர் வாழ வாய்ப் புள்ளது என்று கூறப்பட்டால் அந்த ஒரு மணிநேரத்தை ஸ்ரீதேவியின் சமாதி அருகே வாழ ஆசைப்படுகிறேன்.

ஸ்ரீதேவியின் கல்லறை அருகே எனது உடலை தகனம் செய்ய வேண்டும். ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுப்பது கடினம். என் வாழ்க்கை வராலாறை யார் வேண்டுமானலும் என் அனுமதி இன்றி படமாக்கலாம்.
இவ்வாறு ராம் கோபால் வர்மா கூறினார்.

சர்ச்சைக்குரிய படங்களை எடுப்பதை கைவிடுவது எப்போது என்று கேட்கிறார்கள். நான் அப்படி செய்ய வேண்டும் என்று ஒரு சிலர் எதிர்பார்க்கிறார்கள். அதுபோன்ற படங்கள் எடுப்பதை ஒருபோதும் நிறுத்த மாட்டேன். எனது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க என்னிடம் யாரும் அனுமதி பெறவேண்டியதில்லை. யார் வேண்டுமானாலும் எடுக்கலாம்.
இவ்வாறு ராம் கோபால் வர்மா கூறினார்.

You'r reading ஸ்ரீதேவி சமாதி அருகே தகனம் ஆக விரும்பும் இயக்குனர்.. சர்ச்சை டைரக்டரின் மற்றொரு சர்ச்சை.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இயக்குனரை மணக்கும் நடிகை மிருதுளா.. பாவனா, ரம்யா நம்பீஸன் வாழ்த்து..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்