நயனுடன் பிரிவா? விக்னேஷ் சிவன் முற்றுப்புள்ளி.. நெருக்கமான செல்பி படம் வெளியிட்டார்..

கடந்து சென்ற கிறிஸ்துமஸ், 2020 புத்தாண்டு மற்றும் சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஆகியவற்றை நடிகை நயன்தாரா தனிமையாகவே கொண்டாடினார். எந்நேரமும் அவரது நிழல்போலவே தொடரும் காதலன் விக்னேஷ்சிவன் இந்த 3 விழாக்களில் நயன்தாராவுடன் வரவில்லை. இதனால் விக்னேஷ் சிவன், நயன்தாரா இடையே பிரிவு ஏற்பட்டிருப்பதாக நெட்டில் தகவல் பரவியது. அந்த தகவலை கண்டு அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் சிவன் உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் நெருக்கமாக இருக்கும் புகைப் படத்தை வெளியிட்டார்.

நயனுக்கும் எனக்கும் பிரிவா? அது எப்போதும் நடக்காது என்பதைவெளிப்படுத்தும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டு பிரிவு கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். அத்துடன் மிஸ்யூ விக்கி என்று பிரின்ட் செய்யப்பட்ட ஒரு சிப்ஸ் பாக்கெட்டை நயன்தாரா வைத்திருக்கும் படத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

You'r reading நயனுடன் பிரிவா? விக்னேஷ் சிவன் முற்றுப்புள்ளி.. நெருக்கமான செல்பி படம் வெளியிட்டார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய் சேதுபதி பிறந்த நாளில் ரசிகர்கள் அசத்தல்.. ஒரேநாளில் 202 பேர் உறுப்புதானம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்