மீரா வாசுதேவன் வாய்ப்புகளை தடுத்த மேனேஜர்.. நடிகை பரபரப்பு புகார்..

நடிகை மீரா வாசுவேன் தமிழில் உன்னை சரணடைந்தேன், ஜெர்ரி, கத்தி கப்பல், அடங்க மறு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்திலும் பல படங்களில் நடித்துள் ளார். தனக்கு வந்த பட வாய்ப்புகளை தன்னு டைய மேனேஜர் வேறு நடிகைகளுக்கு வாங்கி தந்து தனக்கு துரோகம் செய்துவிட்டதாக மீரா வாசுதேவன் கூறி உள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது,' மலையாளத் தில் நான் நடித்த தன்மந்த்ரா படத்திற்கு பிறகு எனக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடித்திருந்தார். அதனால் படம் ஹிட்டாக அமைந்தது. இதையடுத்து எனக்கு நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. எனக்கு மலையாளம் பேச தெரியாது என்பதால் கால்ஷீட் பற்றி பேச மேனேஜர் ஒருவரை நியமித்தேன். அதுதான் நான் செய்த தவறாக அமைந்துவிட்டது.

எனக்கு விசுவாசமாக இல்லாமல் எனக்கு வந்த பெரிய பட வாய்ப்புகளை தனக்கு தெரிந்த நடிகைகளுக்கு அவர் அளித்திருப் பதும், எனது கால்ஷீட்டை கதையே சரியில் லாத படங்களுக்கு தந்திருக்கிறார். அவரை முழுமையாக நம்பியதால் கதை எதுவும் கேட்காமல் மானேஜர் சொன்ன படப் பிடிப்பில் சென்று நடித்தேன். அந்த படங்கள் எல்லாமே தோல்வியாக அமைந்தது. தனது சொந்த விருப்பங்களுக்கு என்னை அவர் பயன்படுத்திக்கொண்டார். அவர் செய்த இந்த தவறுகளை நான் மும்பையில் இருந்ததால் என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை.

இவ்வாறு மீரா வாசுதேவன் தெரிவித்தார்.
நடிகை மீரா வாசுதேவன், மறைந்த ஒளிப்பதி வாளர் அசோக்குமார் மகன் விஷால் அகர் வாலை மணந்தார். பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று, மலையாள நடிகர் ஜான் கொக்கென் என்பவரை மணந்தார். அவரிடமி ருந்தும் விவாகரத்து பெற்று பிரிந்தார். இவருக்கு அரிஷா ஜான் என்ற மகன் உள்ளார். தற்போது படங்களில் மீண்டும் நடித்து வருகிறார்.

You'r reading மீரா வாசுதேவன் வாய்ப்புகளை தடுத்த மேனேஜர்.. நடிகை பரபரப்பு புகார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - எம்.ஜி.ஆர் வேடம் அணிந்த அரவிந்த்சாமி.. நான் உங்கள் வீட்டு பிள்ளை.. பாடலுக்கு நடனம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்