பட வாய்ப்பு வராததால் விஷால் பட நாயகி விரக்தி.. இயக்குனர்கள், ஹீரோக்கள் ஒதுக்குகின்றனர்..

சுந்தர்.சி. இயக்கத்தில் விஷால், சந்தானம், ஹன்சிகா, ரம்யாகிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா நடித்திருந்தனர். இதில் கிரண் மகளாக நடித்தவர் மாதவி லதா.

ஏற்கனவே தெலுங்கில் சூடாலினி செப்பாலினி, தொலிபட்டா என ஒரு சில பல படங்களில் நடித்திருக்கிறார். படவாய்ப்பு இல்லாத நிலையில் சில படங்களில் கவர்ச்சியாக நடித்தார். இது அவருக்கு மைனஸ் ஆக அமைந்தது. மேலும் தன்னுடன் நடித்த ஹீரோ, தன்னை வைத்து இயக்கிய இயக்குனர் மீது பாலியல் புகார் கூறினார். இதனால் மற்ற ஹீரோக்களும், இயக்குனர்களும் மாதவி லதாவை ஒதுக்கத் தொடங்கினார். இதனால் விரக்தி அடைந்தார். ஒரு கட்டத்தில் தனது உடல்நிலை பாதிப்புக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளால் மரணம் நேரக்கூடும் என்றளவுக்கு நெட்டில் மெசேஜ் வெளியிட்டார். இது பரபரப்பானதால் அந்தபதிவை நீக்கியதுடன் தனக்கு ஒற்றை தலைவலி மட்டுமே இருக்கிறது. வேறு எந்த பாதிப்பும் இல்லை என்று சமாளித்தார். பின்னர் அரசியல் கட்சியில் சேர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

தற்போது பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் நிலையில் பெரிய வாய்ப்புகள் எதுவும் வராததால் விரக்தி அடைந்திருக்கிறாராம்.

You'r reading பட வாய்ப்பு வராததால் விஷால் பட நாயகி விரக்தி.. இயக்குனர்கள், ஹீரோக்கள் ஒதுக்குகின்றனர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஒரு லட்சம் கிராமங்களுக்கு ஆப்டிகல் பைபர் திட்டம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்