திரிஷாவுக்காக அரண்மனை கட்டிய இயக்குனர்..

சரித்திர பின்னணி கதையாக உருவாகிறது பொன்னியின் செல்வன். மணிரத்னம் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தாய்லாந்து காடுகளில் நடந்தது. விக்ரம், ஜெயம் ரnவி, ஐஸ்வர்யாராய் உள்ளிட்டவர்கள் பங்கேற்று நடித்தனர்.

இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஸ்டுடியோவில் நக்கிறது. இதற்காக சோழர் கால அரண்மனைபோல பிரமாண்ட அரங்கை தோட்டா தரணி அமைத்திருக்கிறார். இந்த படப்பிடிப்பில் திரிஷா கலந்துகொள்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் திரிஷா, வந்தியதேவனாக நடிக்கும் கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்கள் நடிக்கும் முக்கிய காட்சிகள் ஐதராபாத்தில் படமாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து மணிரத்னத்தின் மெட்ராஸ் டாகிஸ் தயாரிக்கிறது. 2 பாகமாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.

You'r reading திரிஷாவுக்காக அரண்மனை கட்டிய இயக்குனர்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஜங்கிள் புக் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபுதேவா.. படத்திற்காக மொட்டை போட்டார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்