சூர்யா-ஹரி பட டைட்டிலுக்கு சர்ச்சை.. ஒரே பெயரில் 3 படமா?

சிங்கம் 3 படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பில் ஹரி இயக்கும் படமாக உருவாகிறது அருவா.

இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்து இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறித்தது. படத்தின் டைட்டில் அருவா என்று அறிவிக்கப்பட்டவுடன் அதனை சூர்யாவின் ரசிகர்கள் நெட்டில் மாஸ் டைட்டில் என்று டிரண்டாக்கினர். தற்போது இந்த தலைப்பு சர்ச்சையாகி இருக்கிறது.

அருவா என்ற டைட்டிலில் ஏற்கனவே பாடலாசிரியர் ஏகாதசி ஒரு படத்தை இயக்கிய உள்ளாராம். அப்படம் பெர்லின் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட விழாக்களில் விருது பெற்றதாகக் கூறியிருப்பது சூர்யா, ஹரி படக்குழுவுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர தருண்கோபி தயாரிப்பில் தீபன் என்ற புதுமுக நடிகர் நடிப்பிலும் அருவா என்ற பெயரில் படம் உருவாகிறது. சூர்யா படத்தின் தலைப்பு மாற்றுவதா அல்லது மற்ற நிறுவனங்களுடன் சமரசம் பேசி அதே டைட்டிலை படத்துக்கு வைப்பதா என்பது பற்றி ஆலோசித்து வருகிறார்கள்.

You'r reading சூர்யா-ஹரி பட டைட்டிலுக்கு சர்ச்சை.. ஒரே பெயரில் 3 படமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கமலிடம் சிபிசிஐடி அதிகாரி 3 மணி நேரம் விசாரணை..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்