கொரோனா பீதியில் பிருத்விராஜ் நடத்திய ஷூ்ட்டிங்..

Corona Scare:Prithviraj Sukumaran Continues Film Shooting in Jordan

ஜோர்தான் நாட்டு ஊரடங்கிலும் ஜரூர்..

ஜோதிகா நடித்த மொழி மற்றும் நினைத்தாலே இனிக்கும், உருமி, அற்புத தீவு போன்ற பல்வேறு தமிழ் மற்றும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்துள்ளவர் பிருத்விராஜ். தற்போது ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடிக்கிறார்.பிளஸ்ஸி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்தான் நாட்டில் உள்ள காதிரம் பாலைவனத்தில் நடக்கிறது. இந்நிலையில் அந்நாட்டிலும் கொரோனோ வைரஸ் பரவியது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இதனால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தகவல் வரவே அவர் ஜோர்தான் நாட்டு அதிகாரிகளுடன் பேசி படப்பிடிப்புக்கு அனுமதி பெற்று தந்தார். வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரை அங்கு படப்பிடிப்பு நடக்க உள்ளது.

கொரோனா தொற்று பயம் நிலவும் நிலையிலும் தைரியமாக படப்பிடிப்பு நடத்தியதற்காக ஒரு பக்கம் பாராட்டு கிடைத்தாலும் திரையுலகில் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் போது பிருத்விராஜ் மட்டும் எப்படி படப்பிடிப்பு நடத்தலாம் என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

You'r reading கொரோனா பீதியில் பிருத்விராஜ் நடத்திய ஷூ்ட்டிங்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - நடிகர் சேது மறைவு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்