பாடகிக்கு 5வது முறையாக கொரோனா டெஸ்ட் உறுதி.. அடங்க மறுக்கும் பிரபலம்..

kanika Kapoor Test Positive Corona Vairus 5th Time

பாலிவுட் பாடகி கனிகா கபூர் வெளிநாடு சென்று வந்தார். அவருக்கு கொரொனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரொனா தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனிமையில் இருக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர்.

அவரோ அதைப் பின்பற்றாமல் பார்ட்டிகளில் கலந்து கொண்டார். பலருடன் நேரில் சென்று பழகினார். இதையடுத்து அவர் மீது கொரொனவை பரப்பி மற்றவர்களைக் கொல்ல முயற்சிப்பதாக லக்னோ போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.உடனடியாக கனிகாவை மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கும் டாக்டர்களுக்கு சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் பந்தா செய்தார். தனக்கு கொரொனா தொற்று இல்லை என்று மறுத்தார். இதையடுத்து அவருக்கு இடைவெளி விட்டு 4 முறை டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில் தொற்று இருப்பது உறுதியானது. தற்போது 5வது முறையாக டெஸ்ட் எடுத்ததில் மீண்டும் அது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு 48 மணி நேரத்துக்கு ஒருமுறை டெஸ்ட் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

You'r reading பாடகிக்கு 5வது முறையாக கொரோனா டெஸ்ட் உறுதி.. அடங்க மறுக்கும் பிரபலம்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - முதன் முறையாகச் சமையலறைக்குள் நுழைந்த ஆண்ட்ரியா.. யூ டியூப் பார்த்துச் சமைக்கக் கற்றார்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்