தயவு செய்து பணத்தை செட்டில் செய்துவிடுங்கள்.. கபாலியால் கெஞ்சும் விநியோகஸ்தர்

கபாலி படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தினால் கடன் கழுத்தை நெறிப்பதாகவும், பணத்தை திரும்ப கொடுக்க முடியாததால் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாகவும் விநியோகஸ்தர் ஜி.பி.செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நடிகர் ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தின் தென்னாற்காடு, புதுச்சேரி உரிமையை ரூ.6 கோடிக்கு வாங்கி இருந்தேன். இதனால் எனக்கு 2.27 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதனால், தாணு கபாலி படத்திற்காக கொடுத்த முன்பணம் 1.50 கோடியை சாட்டிலைட் உரிமம் வந்ததும் திரும்பி தருவதாக கூறி இருந்தார். ஆனால், தாணு இன்னும் பணம் எனக்கு தரவில்லை.

இதனால், எனக்கு கடன் கொடுத்தவர்கள் என்னை கேட்கின்றனர். அவர்கள் என்னை கொல்வதற்கு முன் நானே தற்கொலை செய்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளேன். ரஜினியையும், தாணுவையும் கை எடுத்து கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து பணத்தை செட்டில் செய்து கடன்காரர்களிடம் இருந்து என்னை காப்பாற்றுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading தயவு செய்து பணத்தை செட்டில் செய்துவிடுங்கள்.. கபாலியால் கெஞ்சும் விநியோகஸ்தர் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மதயானைக் கூட்டம் பட ஹீரோவுக்கு டும் டும் டும்.. !

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்