கட்டில் கவிதை போட்டி நீடிப்பு.. நடிகை சிருஷ்டி டாங்கே அறிவிப்பு..

Tamil Movie Kattil Poem Competition

கணேஷ்பாபு இயக்கி நடிக்கும் படம் கட்டில். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்காக திரைப்படக்குழுவின் சார்பில் கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டி அறிவிக்கப்பட்டது. தற்போது அதற்கான தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது.இதற்கான முதல் பரிசு : 25,000, இரண்டாம் பரிசு : 15,000, மூன்றாம் பரிசு : 10,000, ஆறுதல் பரிசு : 20 பேருக்குக் கவிதை நூல்கள். மற்றும் சிறந்த 100 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்படும்.


நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்கப் போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும் விதமாகக் கட்டில் திரைப்படக்குழு, "கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியை" அறிவித்திருக்கிறது. 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தேர்வுக்குழு முடிவே இறுதியானது.உலகில் எந்த நாடுகளிலிருந்தும், அனைத்து வயதினரும், பங்கேற்கும் இப்போட்டியில் ஒருவர் ஒரு கவிதை மட்டுமே அனுப்பலாம். பிரபல கவிஞர்களைக் கொண்டு தேர்ந்தெடுக்கப்படும் சிறப்பான கவிதைகளுக்கு, விரைவில் நடைபெற இருக்கும் கட்டில் திரைப்பட (Audio Release) பாடல் வெளியீட்டு விழாவில் பரிசுத் தொகை காசோலையாக வழங்கப்படும்.

இதனைக் கட்டில் திரைப்படத்தின் கதாநாயகி சிருஷ்டி டாங்கே தெரிவித்திருக்கிறார். இ.வி.கணேஷ்பாபு இயக்கி கதாநாயகனாக நடிக்கும் கட்டில் படத்திற்கு பி.லெனின் கதை திரைக்கதை, வசனம் எழுதி எடிட்டிங் செய்கிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்களை வைரமுத்து- மதன் கார்க்கி ஆகியோர் எழுதுகிறார் கள். ஒளிப்பதிவை வைட்ஆங்கிள் ரவிசங்கர் கையாளுகிறார்.

You'r reading கட்டில் கவிதை போட்டி நீடிப்பு.. நடிகை சிருஷ்டி டாங்கே அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பெப்சி நடிகை நயன்தாரா ரூ 20 லட்சம் நிதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்