பாத்திரம் கழுவ கணவனை கட்டிக்கொண்டேன்.. ரஜினி நடிகை சொல்கிறார்..

Shreyas Latest Kiss Video With Husband Turns Viral

ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. இவர் ரஷியாவை சேர்ந்த ஆண்ட்ரி கோர்ச் சேவ் என்பவரை மணந்து கொண்டார். கணவருடன் பல்வேறு நாடுகளுக்குச் சுற்றித்திரிந்தவர் தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டில் பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் கொரோனா பற்றி டாக்டருடன் கலந்துரையாடல் நடத்திய வீடியோ வெளியிட்டார் ஸ்ரேயா. தற்போது ஒரு உண்மையைச் சொல்லியிருக்கிறார். ஆண்ட்ரியை கணவனாகக் கட்டியது ஏன் என்று சொல்லி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் ஆண்ட்ரி சமையல் அறை சிங்க்கிலிருக்கும் பாத்திரம் ஒவ்வொன்றாகக் கழுவி அடுக்குகிறார். அதைக் காட்டி, 'வீட்டில் எனக்காகப் பாத்திரங்கள் கழுவித் தருவதற்காகத்தான் இவரைக் கட்டிக்கொண்டேன்' என்று சொல்லிச் சிரித்தபடி அவருக்கு ஒரு லிப் கிஸ் தருகிறார் ஸ்ரேயா. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

You'r reading பாத்திரம் கழுவ கணவனை கட்டிக்கொண்டேன்.. ரஜினி நடிகை சொல்கிறார்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கட்டில் கவிதை போட்டி நீடிப்பு.. நடிகை சிருஷ்டி டாங்கே அறிவிப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்