பொன்னியின் செல்வனில் விக்ரம் ஐஸ்வர்யாராய் உடைகள் எடுபடுமா?

costume designer, Eka Lakhani talk about Ponniyin selvan

கல்கி 5 பாகங்களாக எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பக்கங்கள் கொண்ட படமாக இயக்குகிறார் மணிரத்னம். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு பாங்காக், தாய்லாந்து அடர்ந்த காடுகளில் படமானது. விக்ரம், கார்த்தி ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய் நடித்தனர்.


கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாகப் படப் பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் காஸ்ட்யூமர் ஏகா லகானியிடம், 'சரித்திர படமாக உருவாகும் இப்படத்திற்கு காஸ்ட்யூம் மிகவும் உன்னிப் பாக பார்க்கப்படும். எல்லோருக்கும் திருப்தியாக உங்களது காஸ்ட்யூம் இருக்குமா? 'என்று கேட்டபோது பதில் அளித்தார்.
அவர் கூறும்போது, 'உண்மையில் இப்படத்திற்கு நான் நல்ல தேர்வுதான் வேறு பொருத்தமானவர் கிடையாது. அது தவிர இப்படம் எனக்குக் கிடைத்தது பரவசமாக உள்ளது. இப்படியோர் படத்தில் பணியாற்றுவது என்பது எந்தவொரு காஸ்டியூமருக்கும் கனவு நிஜமானது போன்றதாகும் ' என்றார்.

You'r reading பொன்னியின் செல்வனில் விக்ரம் ஐஸ்வர்யாராய் உடைகள் எடுபடுமா? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - விஜய் பட இயக்குனர் பெயரில் உலா வரும் போலிகள்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்