நடிகரின் பிரிவால் மனைவி உருக்கம்.. தம்பதிகளைப் பிரித்த கொரோனா வைரஸ்..

Prithvirajs wife pens an emotional note

நடிகர் பிருத்விராஜ் கடந்த மாதம் ஆடு ஜீவிதம் படப்பிடிப்புக்காகப் படக்குழுவுடன் ஜோர்டான் நாட்டுக்குச் சென்றார். அந்த நேரம் பார்த்து கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா, ஜோர்டான் உள்ளிட்ட பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் பிரித்விராஜ் இந்தியா திரும்ப முடியாமல் ஜோர்டானில் சிக்கி இருக்கிறார்.

இந்நிலையில் பிருத்விராஜின் 9வது திருமண ஆண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு திருமண ஆண்டின்போதும் மனைவி சுப்ரியாவுடன் விழா கொண்டாடும் பிருத்வி இம்முறை ஜோர்டான் நாட்டில் சிக்கி இருக்கிறார். இதுகுறித்து அவரது மனைவி
டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள மெசேஜில்.9வது திருமண ஆண்டு வாழ்த்துக்கள். 9வது வருடத்தில் இதுதான் முதன்முறை இருவரும் தூரமாகப் பிரிந்திருப்பது. ஆனால் என்ன செய்ய முடியும்? நீங்கள் விரைவில் திரும்ப வேண்டும் என ஆவலாகக் காத்திருக்கிறேன் எனத் தெரிவித்திருக்கிறார்.அதேபோல் பிரித்விராஜும் ஜோர்டானிலிருந்து டிவிட்டர் மூலம் மனைவிக்கு 9வது ஆண்டு திருமண வாழ்த்துக் கூறியிருக்கிறார்.

You'r reading நடிகரின் பிரிவால் மனைவி உருக்கம்.. தம்பதிகளைப் பிரித்த கொரோனா வைரஸ்.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கொரோனாவுக்கு எதிராக மக்கள் இணைந்து போர்.. பிரதமர் மோடி பாராட்டு

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்