சந்திரமுகி 2 வேட்டையன் கதையாக உருவாகிறது.. சந்திரமுகியாக ஆகப்போவது யார்?

who is chandramuki in 2nd part of chandramuki

ரஜிகாந்த், பிரபு ஜோதிகா, நயன்தாரா நடித்த படம் சந்திரமுகி. பி வாசு இயக்கி இருந்தார். இதில் சரவணன் என்ற மனோதத்துவ டாக்டராக ரஜினி நடித்திருந்தார். கங்கா பாத்திரத்தில் ஜோதிகா நடித்தார். பின்னர் ஜோதிகா தன் உடம்பில் சந்திரமுகி ஆவி புகுந்து தன் காதலனைக் கொன்ற வேட்டையன் ராஜாவை பழிவாங்குவதுபோலவும் அதன் பிறகு ஜோதிகா உடலிலிருந்து சந்திரமுகி ஆவி விடுபட்டுச் செல்வது போலவும் கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் சந்திரமுகி பாகம் உருவாக உள்ளது. இதன் எப்படியிருக்கும் என்பது பற்றி டைரக்டர் பி. வாசு ஒரு பேட்டியில் கூறும் போது, 'சந்திரமுகி 2ம் பாகம் வேட்டையன் சந்திரமுகிக்குமான தொடக்கக் கால மோதலை மையமாகக் கொண்டு அமைக்கப்படும் ' என்று தெரிவித்திருந்தார். சந்திரமுகி முதல் பாகத்தில் வேட்டையனாக ரஜினி நடித்திருந்தார். 2ம் பாகத்தில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். சந்திரமுகியாக யாரை நடிக்க வைப்பது என்பது ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

You'r reading சந்திரமுகி 2 வேட்டையன் கதையாக உருவாகிறது.. சந்திரமுகியாக ஆகப்போவது யார்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இர்பான் என் வாழ்வை கெடுத்துவிட்டார்.. மனைவி உருக்கம்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்